சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் குறித்து திமுகவினர் ஆய்வு.

-செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் சங்கை இல.சரவணன் தலைமையில் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் நகரத்தில் நடைபெற்ற ஆய்வு நிகழ்வில் மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ராயல் கார்த்திக், வழக்கறிஞர் சதீஷ், நகர துணை செயலாளர் முத்துக்குமார், வார்டு செயலாளர் வீரமணி, பொறியாளர் அணி விக்னேஷ்,
மற்றும் வார்டு செயலாளர்கள் காளிச்சாமி பாண்டியன், செந்தில் குமார், வெள்ளத்துரை, சுப்பிரமணியன், சரவணன், மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தென்காசி
TAGS Dmkஅரசியல்சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிசங்கரன் கோவில் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுக