அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்க பொதுச் செயலாளர் நடன சிகாமணி துவக்கி வைத்தார். மேலும் அகில இந்திய நலச்சங்க துணைத் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வைத்தார்.
இதில் EPS 95 பென்சனர் அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.9000-ம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். பகத்சிங் கோஷியாரி கமிட்டி பரிந்துரைப்படி இடைக்கால நிவாரணம் மாதம் 3000-ம் வழங்க வேண்டும்.
மறுக்கப்பட்ட ROC கம்முடேஷன் வசதிகளை திரும்ப வழங்க வேண்டும். ESI மருத்துவ காப்பீட்டு வசதி வழங்க வேண்டும். வருடாந்திர நிவாரணம் வழங்க வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி உயர்பென்சன் வழங்க வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்க வேண்டும்.
8. அன்டை மாநிலமான – கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களின் EPS 95 பென்சன்தாரர்களுக்கு வழங்குவதுபோல் தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புடன் கூடிய தனி பென்சன் வழங்க வேண்டும்ன போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
மேலும் இந்த கோரிக்கையை குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இறுதியில் தஞ்சை மாவட்ட துணை செயலாளர் மரிய சூசை நன்றி உரையாற்றினார். இந்த போராட்டம் மத்திய அரசு வலியுறுத்தி நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பங்கு பெற்றனர்.