வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த அதிமுக,வினர்.. யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

வாழப்பாடி அருகே கல்வராயன்மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என்,நேரு அவர்கள் திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு பின்பு அதிமுக,வினர் மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த இச்சம்பவம் மலைவாழ் மக்களிடையே யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
சேலம் மாவட்டம் கல்வராயன்மலையில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்குநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கைக்கான் வளைவு கிராமத்தில் உற்பத்தியாகும் நீரோடை கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்திலுள்ள கோமுகி அணையில் சென்று சேருகிறது.
இதனால் சேலம் மாவட்டம் கரியகோவில் நீரோடையை விட கைக்கான் வளைவு நீரோடையில் கூடுதல் தண்ணீா் செல்வதால் கோமுகி அணை பெரும்பாலான ஆண்டுகளில் நிரம்பி விடுகிறது. அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
இதனால் சேலம் மாவட்ட எல்லையிலுள்ள கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் துாரத்திற்கு கால்வாய் அமைத்து மழைக்காலத்தில் உபரியாக செல்லும் தண்ணீரை கரியகோவில் நீரோடையில் திருப்பி விட்டு கரியகோவில் அணையை நிரப்புவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இன்னிலையில் கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் துாரத்திற்கு கால்வாய் அமைத்துச் சென்று கரியகோவில் நீரோடை வழியாக அணைக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் 7.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இன்னிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 20ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என் நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கைக்கான் வளைவு காட்டாற்றின் உபரி நீரை கரியக்கோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் பணியினை தொடங்கி வைத்தார்கள்,
இதையறிந்த அதிமுக,வினர், போட்டி அரசியலுக்காக இரண்டு நாட்கள் கழித்து அதிமுக, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயசங்கர், நல்லதம்பி, சித்ரா உள்ளிட்ட அதிமுக,வினர் கைக்கான் வளைவு நீரோடைக்கு சென்று பூஜை செய்தும் மலர் தூவியும் மீண்டும் தண்ணீரை திறந்து வைத்த இச்சம்பவம் மலைவாழ் மக்களிடையே யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை கிளப்பியுள்ளது,