தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரி மாணவிகள் குத்துச்சண்டை போட்டியில் இரண்டாமிடம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மயிலாடுதுறையில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகமும் மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழகமும் இணைந்து நடத்திய தஞ்சை மண்டல அளவிலான
குத்துச்சண்டை போட்டியில் தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டு வெள்ளி பதக்கமும், ஏழு வெண்கல பதக்கமும் பெற்று தஞ்சை மண்டல அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள்,சக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
செய்தியாளர் க. கார்முகிலன்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமயிலாடுதுறை மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிமயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழகம்மயிலாடுதுறை மாவட்டம்விளையாட்டு செய்திகள்