கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நேரு யுவ கேந்திரா இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை வகித்தார்.
கோட்டாட்சியர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
கல்லுாரியின் செயலாளர் மகேந்திரன் கலந்து கொண்டு விழா நோக்கம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கருத்துரையாளராக திருநெல்வேலி தொழில் முனைவோர் வழிகாட்டி மைய இயக்குநர் வைரவராஜ் பேசினார். தொடர்ந்து திருச்செந்தூர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கதிரேசன் கலந்து கொண்டு, இந்தியா தலைமை பொறுப்பு ஏற்றிற்கும் ஜி-20 சிறப்பு பற்றியும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற மந்திரம் உலக நலனுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கருத்தரங்க நிகழ்ச்சியில் இளைஞர்கள், மகளிர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் பாராம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கருத்தரங்கில் ஏகம் பவுண்டேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன், தெற்கு திட்டங்குளம் மகளிர் மன்ற தலைவி ரஞ்சிதமணி, நேரு யுவகேந்திரா
முன்னாள் தேசிய இளையோர் தொண்டர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.