NEET தேர்வு மைய்மயங்களுக்கு செல்ல புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்கு ( PRTC )பேருந்துகள் இயக்கப்படுகிறது.

04.05.2025 அன்று மருத்துவப் படிப்புக்கு நடைபெறும் நுழைவுத் தேர்வு (NEET) புதுச்சேரியில் கீழ்க்கண்ட மையங்களில் நடைபெற இருக்கிறது.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர PRTC சார்பில் நகரப் பேருந்துகள் இயக்க PRTC மேலாண் இயக்குனர் அவர்கள் ஆவண செய்துள்ளார்
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல கீழ்க்கண்ட நேரங்களில் நகரப் பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கீழ்க்கண்ட நேரத்தில் தேர்வு மைய்யங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகிறது.
காலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை பேருந்துகள் புறப்படும்.
தேர்வு மையங்களில் இருந்து புதுச்சேரி பேருந்து நிலையம் வருவதற்கு மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரை பேருந்துகள் புறப்படும்.
1. தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏர்போர்ட் ரோடு, லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி.
2. சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலை நகர் வீதி, முத்தியால்பேட்டை புதுச்சேரி.
3. பாரதிதாசன் பெண்கள் அரசு கல்லூரி, மகாத்மா காந்தி ரோடு, முத்தியால்பேட்டை, புதுச்சேரி.
4. அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி ,லாஸ்பேட், புதுச்சேரி