தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர்.

பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது.

இந்த ஆலயத்தில அம்மன் புற்றாக தோன்றி காட்சி அளிக்கிறார். இதனால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வதில்லை. அம்மை நோய் மற்றும் தீராத நோய் கண்டவர்கள் ஆலயம் சுற்று பிரகாரத்தில் வேப்பிள்ளை மீது படுத்து வேண்டி கொண்டால் நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மனை தரிசனம் செய்ய ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் பாதசாரியாக கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி மாவிளக்கு போட்டு தங்கள நேரத்தி கடனை நிறைவேற்றி கொண்டு நீண்ட வரிசையில் காத்து இருந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
