BREAKING NEWS

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் “நான் முதல்வன் திட்டம்- கல்லூரி கனவு” 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் துறை சார்ந்த அனைத்து வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்கான விழிப்புணர்வுகளை வழங்கினர்.

இந்நிழச்சியில் காணை ஒன்றியத்தைச் சார்ந்த 12-ம் வகுப்பு முடித்த சுமார் 85 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.

இந்த நிகழ்வை மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்
நா.கேசவலு, வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் காணை ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் வழிகாட்டுதல் வழங்கினார்கள்.

CATEGORIES
TAGS