BREAKING NEWS

அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது தென் திருப்பதி என அழைக்கப்படும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில்.

இக்கோவிலின் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

வரும் 23ஆம் தேதி திருக்கல்யாணமும் 25ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் 26 ஆம் தேதி ஏகாந்த சேவை உடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருத்தேர் அன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவின் ஒவ்வொரு நாட்களிலும் சாமி பல்வேறு விதமான அலங்காரங்கள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும்.

திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன .

CATEGORIES
TAGS