BREAKING NEWS

ஆண்டிமடம் அருகே அருள்மிகு முனியப்பா அய்யனார் காளியம்மன் திரௌபதி மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டிமடம் அருகே அருள்மிகு முனியப்பா அய்யனார் காளியம்மன் திரௌபதி மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கருக்கை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு முனியப்பா அய்யனார் காளியம்மன் திரௌபதி மாரியம்மன் பால விநாயகர் பாலமுருகன்கோவில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை நடைபெற்றது.

இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற நான்கு கால வேள்வி பூஜைகள் முடிவற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலைச் சுற்றி வலம் வந்தது இதனையடுத்து . கோவில் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரை ஊற்ற பக்த கோடிகளின் அரோகரா கோஷம் ஒலிக்க காலை 11 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS