BREAKING NEWS

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

 

வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பாக ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் பலரும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி பகுதியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமைச்சர் திடீரென தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தி வாக்கு சேகரித்தார்.

Share this…

CATEGORIES
TAGS