BREAKING NEWS

உலக பட்டினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடிய சங்கராபுரம் வெற்றிக் கழக நிர்வாகிகள்

தலைவரின் சொல்லை தட்ட மாட்டோம் அவர் கண்ணை அசைத்தால் நாங்கள் விண்ணையே அசைப்போம் உலக பட்டினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடிய சங்கராபுரம் வெற்றிக் கழக நிர்வாகிகள் .

இன்று தமிழ் திரை உலகில் உச்சபட்ச ஸ்டார் நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய் இவருக்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் அரசியலில் இறங்கி தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிட வேண்டுமென விரும்பிய அவர் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தொடங்கிய ஒரே நாளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டினியில்லா உலகத்தை படைப்போம் என்று தனது கழக உடன்பிறப்புகளுக்கு அறிக்கை வெளியிட்டதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒன்றிய வெற்றி கழகத்தின் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த், மாவட்ட தலைவர் பரணி பாலாஜி இவர்களின் வழிகாட்டுதலோடு ஒன்றிய தலைவர் பங்க் குமார் தலைமையிலும், ஆர் எம் ஏ ஜெயப்பிரகாஷ் முன்னிலையிலும் கழக தலைவருக்கு வாழ்த்து கோஷங்கள் உணர்ச்சி பொங்க கூறி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS