BREAKING NEWS

ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்

ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்

ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்: சடலத்தை எடுக்கவிடாமல் உறவினர்கள் வாக்குவாதம், தளி போலிசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே உள்ள சூலகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா(80) நேற்று மாலை வீடு திரும்பாத நிலையில், இன்று காலை உறவினர்கள் முதியவரை தேடியபோது

சூலகுண்டா கிராமத்தில் உள்ள அவரது விளைநிலத்தில் ஒற்றைக்காட்டுயானை தாக்கி நாராயணப்பா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது..

தொடர்ந்து யானை தாக்குதலால் விவசாயிகள், பொதுமக்கள் உயிரிழக்கும் நிலையில் வனத்துறையினர் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை எனக்குற்றம் சாட்டி நாராயணப்பா உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் தளி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

CATEGORIES
TAGS