BREAKING NEWS

குஜராத் பட்டாலியன் படையினர் கொடைக்கானலில் கொடி அணிவகுப்பு‌.

குஜராத் பட்டாலியன் படையினர் கொடைக்கானலில் கொடி அணிவகுப்பு‌.

கொடைக் கானலில் காவல்துறையினர் மற்றும் குஜராத்தை சேர்ந்த மத்திய காவல் படையினர் 100 க்கும் மேற்பட்டோர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினரும் சேர்ந்து நாயுடுபுரம் பகுதியில் இருந்து லேக் ஜங்ஷன், கொடைக்கானல் பேருந்து நிலையம், மூஞ்சிக்கல் பகுதி வரை உள்ள பிரதான சாலையில் பேரணியாக அணிவகுத்து சென்றனர்.

இந்த அணிவகுப்பானது வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும் மக்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி வாக்களிக்கவும் இந்த அணிவகுப்பானது நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த அணி வகுப்பில் ADSP தெய்வம்,DSP மதுமதி தலைமையில் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் கொடைக்கானல், தாண்டிக்குடி காவலர்கள் கலந்து கொண்டனர்…

Share this…

CATEGORIES
TAGS