BREAKING NEWS

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்…

 

கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்தை ஆதரித்து தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் சக்திவேல் கோவை ரயில் நிலையம் பகுதியி்ல் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சக்திவேல் கூறுகையில்..
தமிழக முற்போக்கு கட்சியின் தேர்தல் அறிவிப்புகளாக அனைத்து மக்களுக்கும் கல்வி, மின்சாரம், அரசி, கேஸ் சிலிண்டர், ஆகியவை இலவசமாக வழங்கபடும் எனவும், மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுவாக்கி வறுமையை ஒழிக்க பாடுவேன், புதிய அரசியல் சாசனத்தை இயற்றுவேன் என பல திட்டங்களை அமுல் படுத்த உள்ளதாகவும், தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்று இடங்களில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி போட்டியிடுகின்றது, இதன் ஒரு பகுதியாக கோவையில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் போட்டியிடுகின்றார் அவருக்கு உங்களது வாக்குகளை அவருக்கு அளியுங்கள் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகர் ராஜமாணிக்கம், திருப்பூர் வழக்கறிஞர் நஞ்சுண்டேஷ்வரர், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் திவ்யா, லட்சுமி, பெரியகுமாஸ்தா செல்வராஜ், ஜான், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, மோகன் ராஜா, கணுவாய் ராதாகிருஷ்ணன், ரோஷி, தனபால், பால்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS