BREAKING NEWS

சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

 

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அங்கு தர்பூசணி பழம், மோர் மற்றும் தண்ணீர் ஆகியவைகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பந்தல் தொடர்ந்து கோடை காலம் முழுவதும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS