BREAKING NEWS

திருவெறும்பூர் அருகே பயங்கரம் டாஸ்மாக் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி.

திருவெறும்பூர் அருகே பயங்கரம் டாஸ்மாக் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி.

திருவெறும்பூர் அருகே உள்ள உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரியும் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறிக்க முயற்சி செய்த கும்பல் கிராம மக்கள் திரண்டதால் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றிய விவரம் வருமாறுதிருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழமாங்காவனம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது,இந்நிலையில் அந்த கடையில் மேல மங்காவனத்தை சேர்ந்த பாண்டியன்( 47) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் அருவாள் மற்றும் கத்தியுடன் வந்து இறங்கி பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கல்லாவில் உள்ள பணத்தை கொடுக்குமாறு கூறி பாண்டியனை அருவாளால் வெட்டியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியை சேர்த்த பொதுமக்கள் திரண்டதால் மர்ம கும்பல் காரில் ஏறி தப்பி சென்றனர்.இச்சம்பவம் பற்றி திருநெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அந்த வழியாக வந்த காரை மறித்து நிறுத்த முயன்றனர்.ஆனால் அந்த காரில் வந்த மர்ம கும்பல் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றதை தொடர்ந்து அந்த காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது.

காயமடைந்த பாண்டியன் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்இச் சம்பவபற்றி துவா குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன் பாண்டியனை வெட்டி சென்று மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.மேலும் இந்த கீழ மாங்காவனம் அரசு மதுபான கடையில் ஏற்கனவே திருட்டு நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS