BREAKING NEWS

தீ விபத்து துப்புரவு பணியாளர் குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து காலனி, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (52 ). இவர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 :45 மணியளவில் அவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. அதை கண்ட அக்கம் பக்கத்தினர் சங்ககிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு நிலைய கூடுதல் பொறுப்பு அலுவலர் கோவிந்தராஜ் தலைமையிலான மீட்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின . இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS