BREAKING NEWS

தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில்

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை, தேவர் சிலை, பழைய பேருந்து நிலையம், வ.உ.சி.சிலை மற்றும் திருமலாபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்றும், ஜீப்பில் பயணம் செய்தும் தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய முத்தரசன் கூறுகையில், தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி நடத்திய பாஜக மற்றும் அதற்கு துணை போன அதிமுக கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து இந்தியா கூட்டணி வேட்பாளரான தங்கதமிழ்செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும் ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்று அப்பகுதி மக்களை ஏமாற்றிய டிடிவி தினகரன் தற்போது தேனி தொகுதி மக்களையும் ஏமாற்ற வந்துள்ளார். அவருக்கும் இந்த தேர்தலில் தகுந்த பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் என்று பேசினார்.

Share this…

CATEGORIES
TAGS