BREAKING NEWS

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2024 ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது இந்நிலையில் ஜூன் நான்காம் தேதிநடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில் இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருக்கு பின் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்பதை கொண்டாடும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சங்கத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் விவசாய மாவட்ட பொது செயலாளர் மோகன்இவர்கள் முன்னிலையில்பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பட்டாசு வெடித்தும் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மேலும் நரேந்திர மோடி அவர்களை வாழ்த்திமிகவும் உணர்ச்சி பொங்க உற்சாகமாக சங்கராபுரம் பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர்.இந்நிகழ்வில் எஸ் சி பிரிவு ஒன்றிய தலைவர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…

Share this…

CATEGORIES
TAGS