BREAKING NEWS

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்

மாங்காட்டில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உருக்கமான பேச்சு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி ஆர் பாலு போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் மாங்காடு அடுத்த பட்டுர் பகுதியில் நகர செயலாளர் ஜபருல்லா தலைமையில் நடைபெற்றது இதில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக வேட்பாளர் டி ஆர் பாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார் .

பின்னர் அவர் பேசுகையில் :

போட்டதிலேயே போடுறியா
மாத்தி போடுங்க அப்படின்னு சொன்னாங்க நீங்க தப்பா நினைச்சு மறுபடியும் என்ன ஜெயிலுக்கு அனுப்பாதீங்க

கைதான பிறகு
கட்சியில் என்னை உடனடியாக சேர்க்கவில்லை.

கட்சியில் என்னை சேர்க்க என்னுடன். நிற்கும் தம்பிகள் நிர்பந்தம் செய்தார்கள்

மக்களுக்கு உழைக்காமல் சென்றால் திமுக காரனுக்கு தூக்கம் வராது

நான் கைதாகி
சிறையில் இருக்கும் போது சிறை காவலர்களை தூங்க விடவில்லை

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்

குரங்குக்கே தாவும் பழக்கத்தை கற்று கொடுத்தது பாமக தான்

பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தியது
இறுதி யாத்திரை போல் இருந்தது அன்னாமலையோ மக்கள் தரிசன யாத்திரை என கூறினார்

வாரிசு அரசியல் என்று கூறுகிறார்கள்
ஆண்மை இருக்கிறது வாரிசு இருக்கிறது

உதயநிதி ஸ்டாலின் கருவிலேயே தியாகி என பேசினார்.

பொதுக்கூட்டம் முடிந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள், மணமகனுடன் வாழ்த்து சொல்ல வந்தவர்கள் புகைப்படம் எடுத்து கொள்வது போல் கூட்டத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக வரிசை வரிசையாக சென்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தியிடம் புகைப்படம் எடுத்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள்.

CATEGORIES
TAGS