BREAKING NEWS

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..

முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்..

அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் தற்போது உள்கட்சி பூசல் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் மோதத் தொடங்கியுள்ளார். அதேநேரத்தில் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தயார் என்றும் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானதாக இன்று தனியார் செய்தி நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளது

தனியார் நாளிதழில் வெளியான செய்திக்கு கோபியில் பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தன் மீது அவதூறாக செய்தி வெளியிட்ட தினசரி பத்திரிகையை கண்டித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி….

நாற்பத்து ஐந்து ஆண்டு காலமாக அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சினரும் சிறு குற்றம் கூட சொல்லமுடியாத அளவிற்கு எனது பயணம் நேர்மையாக தொடர்ந்து வருகிறது என்றும்

ஆனால் என்னைப்பற்றி அவதூறாகவும் சற்றும் உண்மையில்லாத வகையிலும் செய்தியை வெளியிட்ட பத்திரிகை செய்தியாளர் அது குறித்து என்னிடம் கருத்தை கேட்டிருக்க வேண்டும் எனவும்

இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை தாங்களாகவே வெளியிடுவது பத்திரிகை தர்மம் இல்லை என்றும்

ஆகவே இது போன்ற உணமைக்கு புறம்பான செய்தியை வெளிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும்

எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும்

அதிமுகவில் உள்ள கோடான கோடி தொண்டர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கத்திற்கு நான் தூணாக நின்று பணியாற்றி வருகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்தார்..

CATEGORIES
TAGS