BREAKING NEWS

பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

பூந்தமல்லி அடுத்த கோளப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இந்த குடோனில் இருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது இதனை கண்டதும் அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பூந்தமல்லியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீயானது அடுத்தடுத்து பரவிய நிலையில் கொழுந்துவிட்டு எரிந்தது இதையடுத்து கூடுதலாக கிண்டி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த குடோன்கள் தீப்பிடித்து எரிவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது நாசவேலை காரணமா மேலும் தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS