BREAKING NEWS

பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரதாக்கியதில் உயரிழந்தார்

பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரதாக்கியதில் உயரிழந்தார்

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரின் தலையில் பெண்ணின் சகோதரன் தாக்கியதில் காவல் நிலைய வாசலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் சகோதரனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட்(46). காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அதேபகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றுல் லாவண்யா (26) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லாவண்யாவை ஆடிட்டர் ராபர்ட் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து லாவண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட் மீது புகார் அளித்ததையடுத்து விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ராபர்ட் வந்தார்.

அப்போது அங்கு ராபர்ட்டை காவல் நிலைய வாசலில் வைத்து லாவண்யாவின் சகோதரர் மௌலி என்பவர் தலையில் 3 முறை பலமாக தாக்கியுள்ளார். இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார்.

காவல் நிலைய வாசலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து லாவண்யாவின் தம்பி மௌலி(23)யை திருவள்ளூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS