BREAKING NEWS

போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்.

போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காமலாபுரம் புதூரைச் சேர்ந்தவர் பூபதி மகன் ராமஜெயம் இவர் நேற்று மாலை தனது புல்லட்டில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் . அப்பொழுது இவர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோதியது. இதில் இவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த வரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் விரைந்து வந்து விசாரணை செய்ததில் காரில் 15 மூட்டை போதை புகையிலை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதை புகையிலை கடத்தி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஒட்டி வந்த நபர் தப்பி ஓடி தலைமறைவான நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this…

CATEGORIES
TAGS