BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் அதற்கான பணிகளை தீவிர மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்கவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

 

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி நகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணியை மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டான பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணியானது சேலம் சாலை வழியாக ராசு வீதி,கிருஷ்ணன் கோவில் தெரு,சீனிவாச காலனி,சப்ஜெயில் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சென்று இறுதியாக கிருஷ்ணகிரி சேலம் சாலை பழைய சப்ஜெயில் பகுதியில் நிறைவடைந்தது.

 

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த பேரணியில் போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு, உளவு பிரிவு, மகளிர் காவலர்கள் உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )