மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (அரசமரம்) வட்டார அளவிலான சுகாதார திருவிழா.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (அரசமரம்) வட்டார அளவிலான சுகாதார திருவிழா / மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் உயர்திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்களும், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களும் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளரும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவருமான கே. ஈஸ்வரசாமி அவர்களும், மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் கலைவாணி பாலமுரளி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் K. செல்லப்பன், PS. தங்கராஜ், M. ஜெயக்குமார், V. மகாலிங்கம், A. நடராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் S. செந்தில்குமார், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் N. சேதுபால், PC. ஆண்டமுத்து, KS. செந்தில்குமார், மடத்துக்குளம் பேரூர் கழகச் செயலாளர் துரை. பாலமுரளி, மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தி. ரங்கநாதன், மருத்துவ அலுவலர் தாமரைக்காண்ணன் உட்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
