மாவட்ட செய்திகள்
கஞ்சா கடத்தல் கும்பல் தலைவனோடு காவல்துறை அதிகாரி பிரியாணி சாப்பிடும் புகைப்படம்.
கஞ்சா கடத்தல் கும்பல் தலைவனோடு காவல்துறை அதிகாரி பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா இலங்கைக்கு விசைப்படகு வழியாக நாகப்பட்டினத்திலிருந்து கடத்தப்பட உள்ளதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் துறைமுகத்தில் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீஸார், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.