மாவட்ட செய்திகள்
காட்பாடி அடுத்த செம்பராய நல்லூர் கிராமத்தில் கிராம சபா நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செம்பராய நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் ஒன்றிய தலைவர் ஜீவிதா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன மேலும் கிராம வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் துரை,செம்பராய நல்லூர் வார்டு உறுப்பினர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வேளாண் அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் டில்லி ராணி பரஞ்சோதி அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
