மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது விருப்பம் செலுத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தேர்தல் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.கழக அமைப்புத் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மதுரைவீரன் முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாவட்ட கழக செயலாளர் விருப்ப மனுவை செலுத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து எட்டயாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் திமுக வார்டு செயலாளர் ரத்தினம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திமுக இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிராஜ், அம்மா பேரவை நகர பொருளாளர் அம்பிகா வேலுமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி ஒன்றியச் செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன்,அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கருங்குளம் அய்யாத்துரை பாண்டியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமணன் பெருமாள், கருங்குளம் முன்னாள் ஒன்றிய சேர்மன் கோசல்ராம், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,

கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லட்சுமணன் பெருமாள்,எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜகுமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், மாணவர் அணி இணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் காளிபாண்டி, வழக்கறிஞர் சங்கர் கணேஷ், அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர்

சாமிராஜ்,அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர் ஹேமலதா செல்வக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி,கடம்பூர் பாலமுருகன் என்ற விஜி,கடம்பூர் மாயா துறை,அழகர்சாமி, பழனிகுமார், முருகன், கார்த்திக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
