BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூரில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய வலியுறுத்தியவதற்கு தெரிவித்தும் மாற்று இடம் வழங்க கோரியும் பல்வேறு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய வலியுறுத்தி அந்தந்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் திருப்பூர் அணைப்புதூர் பகுதியில் 138 குடும்பங்கள் வசித்து வரக்கூடிய இடம் நீர்நிலை புறம்போக்கு என காலி செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது .

அவ்விடத்தில் குடியிருப்பவர்கள் இதுவரை மின் இணைப்பு வீட்டு வரி உள்ளிட்டவற்றை கட்டி வருவதாகவும் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும் தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதேபோல திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் 40க்கும் மேற்பட்டவரை காலி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாற்று இடம் வழங்க வேண்டியும் நகராட்சித் தலைவர் குமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )