தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தால் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்தது. அந்த வகையில் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனிடையே கடந்த வாரம் முதல் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு 1 முதல் 9-ஆம் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ளது.
அதே போல் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் இறுதி வாரத்தில் தேர்வுகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் 1 முதல் 9-ஆம் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
