இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பயோமெட்ரிக் முறை!
இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பயோமெட்ரிக் முறை!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
அதனை தடுக்கும் வகையில், எதிர்காலத்தில் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டிற்கு பதில் பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு முறையை கொண்டுவர டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தேர்வர்கள் தங்கள் விரல் ரேகை பதிவு செய்தால் அதில் உள்ள தகவலின் படி தேர்வரைக்குள் அனுமதிக்கப்படுவர். இதனால் ஆள்மாறாட்டம் தடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்க இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
