BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் தேர்தலை ஒட்டி காவல்துறையினர் பல்வேறு விதமாக பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் அனைவரும் சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் சுதந்திரமாக பாதுகாப்பாக வாக்களிக்கலாம் ஆகவே அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சுனில் குமார் தலைமையில் போலீசார் அனைவரும் அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.

இந்த ஊர்வலம் ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் துவங்கி, திருவள்ளூர் சாலை, தோட்டக்கார தெரு, தேரடி, காந்தி சாலை வழியாக மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் நிலையம் வந்தடைந்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )