தஞ்சையில் வசித்து வரும் காந்தியின் விசுவாசியான சிவஞானம் என்பவர் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தஞ்சையில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். காந்தியடிகளின விசுவாசி ஆவார். தனது வணிக நிறுவனங்களுக்கு காந்தி என பெயர் வைத்துள்ளார். ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் நாட்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதன்படி, 75வது சுதந்திர தினவிழாவான இன்று சிவஞானம் தஞ்சை மாநகராட்சி கட்டடத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
CATEGORIES தஞ்சாவூர்