BREAKING NEWS

விருத்தாசலத்தில் வெடி வெடித்ததை தட்டி கேட்டதால் குமரப்பா காலனி குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல்

விருத்தாசலத்தில் வெடி வெடித்ததை தட்டி கேட்டதால் குமரப்பா காலனி குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல்

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் புதுப்பேட்டை நகரின் இருக்கும் குபேரசாமி பிள்ளை காலனியில் சுமார் 10 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

 

 

 

அருகில் உள்ள டீக்கடையில் வெடி வெடித்துக்கொண்டிருந்த அராஜக கும்பல் காலனியை நோக்கியும் வெடி வெடிக்க ஆரம்பித்தன.

 

 

பின்பு போதையில் இருந்த கோஸ்டி கும்பல் காலனியில் இருந்தவர்களை கேலியும் கிண்டலும் பேச ஆரம்பித்தனர், இதனால் காலனியில் வசித்து வருபவர்கள் வெடி வெடித்ததைப் தட்டிக் கேட்டனர்.

 

இதில் ஆத்திரமடைந்த கோஸ்டி கும்பல் காலனிக்குள் புகுந்து சரமாரியாக அராஜகம் செய்து, பெண்களை அவமானமாகவும் இழிவாகவும் பேசத் தொடங்கினர். காம்பவுண்ட்யின் கேட்டை உடைத்து விட்டு அடிதடியில் இறங்கினர்.

 

 

பின்பு விருத்தாச்சலம் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்திய பிறகு விரைந்து வந்த காவல்துறையினர் கோஷ்டி கும்பலை பிடிக்க முயன்றனர் இதனை அறிந்த அவர்கள் தப்பி ஓடினர். இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

பின்பு காலனியில் இரவு முழுவதும் பாதுகாப்பிற்காக போலீசாரை அமைக்கப்பட்டனர். அராஜக கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )