BREAKING NEWS

தன்னம்பிக்கை விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் பயிற்சி ஆட்சியர் கோகுல் பேச்சு.

தன்னம்பிக்கை விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் பயிற்சி ஆட்சியர் கோகுல் பேச்சு.

 

திருநெல்வேலி,

 

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை மாவட்டமைய நூலகம், வாசகர் வட்டம், தூய யோவான் கல்லூரி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகடமி இணைந்து போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் தூய யோவான் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

 

நிகழ்விற்கு வந்திருந்தவர்களை வாசகர் வட்ட துணை தலைவர் நல்லாசிரியர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் அ.மரியசூசை தலைமை தாங்கினார்.

 

மாவட்ட நூலக அலுவலர்.லெ. மீனாட்சி சுந்தரம் மாவட்ட முதன்மை நூலகர் இரா.வயலட் நூலக கண்காணிப்பாளர் மு. சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதவி ஆட்சியர் (பயிற்சி)எஸ்.கோகுல். இ.ஆ.ப., கலந்துகொண்டு போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் உரை வழங்கினார்.

 

டிஎன்பிசி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் 22 ஆவது இடம் பெற்ற நெல்லையைச் சார்ந்த ரமளி ராமலட்சுமி, ஜான்ஸ் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சோபியா கிறிஸ்டியனா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார்.

 

நிகழ்வில் தூய யோவான் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுதாகர் ஐசக், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜி. செல்வன், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகடமி மேலாளர் சரவணன்,ஆகியோர் ஊக்க உரையாற்றினர்.

 

நிகழ்வில் நூலக வாசகர் வட்ட புரவலர்கள். பாலசுப்பிரமணியன் கவிஞர் சிற்பி பாமா பல்கலைக்கழக நூலகர் முனைவர் திருமகள் நூலகப்பணியாளர் கருப்பசாமி, மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ – மாணவியர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக நல்லூலகர் முனைவர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். கோகுல் இ.ஆ.ப. பேசியதாவது:-

தன்னம்பிக்கை விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

 

கேரளாவில் அடுத்தடுத்து மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்கு தன்னார்வலராக சேவை பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சேவை முக்கியத்துவம் குறித்து நான் அறிந்தேன். அப்போது முடிவெடுத்து ஐஏஎஸ் தேர்வு எழுதி விடாமுயற்சியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றேன். தற்பொழுது பி.எச்டி படித்துக் கொண்டிருக்கிறேன்.

 

இங்கு நெல்லையில் பயிற்சி உதவி கலெக்டராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில் எனக்கு இது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர் முயற்சியும் கடின பயிற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும்.

 

விடா முயற்சி தன்னம்பிக்கையோடு தொடர்ந்து பயிற்சி பெற்றால் போட்டி தேர்வில் வெற்றி பெற இயலும். குறிக்கோளை அடைய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

 

உங்களுடைய குறிக்கோள் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )