உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் முன்புறத்தில் நம்ம தஞ்சாவூர் என்ற கண்கவர் பெயர் பலகை அமைப்பு.
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இககோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர், உள்ளூர் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்திருந்து கோவிலின் கட்டிடக்கலையை பார்த்தும் சுவாமியை ‘ தரிசனமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நம்ம தஞ்சாவூர் என்ற பெயர் பலகை தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களிலிருந்து கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோவிலை பார்ப்பது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் வந்ததன் நினைவாக பெயர் பலகை முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர், மேலும் அங்குள்ள ராஜராஜ சோழன் சிலை பின்புறமும் நம்ம தஞ்சாவூர் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.