BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கு, மேயர் கார், தயார் நிலை.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர், வரும் மார்ச் 2ம் தேதி புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர். 4 ந் தேதி மாநகராட்சி, மேயர், துணை மேயர், நகராட்சி பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் ஆகியோர் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில்
தஞ்சாவூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கான கூட்ட அரங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் புதுப்பொலிவுடன் தயார் நிலையில் உள்ளது, அங்குள்ள மேயர், துணை மேயர் அமரும் நாற்காலிகள், கவுன்சிலர்கள் அமரும் நாற்காலிகள், ஒலி பெருக்கிகள், ஒளி விளக்குகள் ஆகியவை பிரமாண்ட நிலையில் தயாராக உள்ளது மேலும் மாநகராட்சி மேயர் பயன்படுத்தும் சொகுசு கார் மாநகராட்சி கொடி பொருத்தப்பட்டு சைரன் வைக்கப்பட்டு மேயர் பயன்படுத்தும் அளவில் தயார் நிலையில் உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )