திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு கூட்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் மணிவண்ணன், மாநகர் நல அலுவலர் ஷர்மிலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்ணுயிர் துறை தலைவர் ஞானகுரு,
துணை இயக்குனர் (காசநோய்) சாவித்திரி, எச்.ஐ.வியுடன் வாழ்வோர்க்கான கூட்டமைப்பு தலைவர் தமிழ் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.