BREAKING NEWS

வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் காட்டுப்பன்றி தாக்கிப் படுகாயம்.

வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் காட்டுப்பன்றி தாக்கிப் படுகாயம்.

வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி.

 

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து இஞ்சிப்பாறை பகுதிகளில் கடந்த ஒரே மாதத்தில் நான்கு பேரை கரடி தாக்கிய வடு மாறுவதற்குள் நேற்று புதுத்தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கியது.

 

 

வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் குடியிருந்து வரும் மேரி க/ பெ ஜெபஸ்டியன் வயது 60 இவர் வீட்டில் உள்ள குப்பைகளை சேகரித்து நிர்வாகத்திற்கு சொந்தமான குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சென்றபோது தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கி இரண்டு தொடைகளிலும் கடித்து குதறியதால் படுகாயம் அடைந்து அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தனர்.

 

 

தகவல் அறிந்த வனத்துறை வால்பாறை ரேஞ்சர் மணிகண்டன் அவரை நேரில் சென்று ஆறுதல் கூறி மருத்துவ ₹ 5000 வழங்கினார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )