செங்கத்தில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டாரத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான சாத்தனூர் அணையில் ஒன்பது மதுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுவதால் அதனை காண அதிக அளவில் பொதுமக்கள் சாத்தனூர் அணையில் குவிந்தனர்.
இதில் பலர் அணையில் இருந்து தண்ணீர் வெளியே கண்டு மகிழ்ந்து செல்பி எடுத்தும் படகு சவாரி செய்தும் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த நிலையில் படகு சவாரி இரண்டு பேர் செல்லும் படகு மட்டுமே உள்ளதால் மூன்றுக்கும் மேற்பட்டோர் உள்ளவர் செல்ல முடியாததால் பலரும் படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பி செல்லும் நிலையில்,….
பொதுப்பணித்துறையினர் அதனை கருத்தில் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் படகுகளை எடுத்து வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் பொதுப்பணித் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
CATEGORIES திருவண்ணாமலை