கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து தனியார் பேருந்து கார் லாரி ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரே ஒரே காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் இரண்டு பெண்கள் ஓட்டுனர் உட்பட ஐந்து பேர் உடல் நசுங்கி காருக்குள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த வேப்பூர் போலீசார் இரண்டு மணி நேரமாக போராடி வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்குள்ளானதில் இறந்தவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரின் பதிவு எண் வைத்து விசாரணை செய்ததில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சென்னை நங்கநல்லூர் இந்து காலணியை சேர்ந்த விஜயராகவனின் மனைவி வட்சலா, அவரது தாய் வசந்த லக்ஷ்மி, மகன்கள் விஷ்ணு, ஆதீர்த் என்பது தெரிய வந்தது. மேலும் சம்பவம் தொடர்பாக விஜயராகவனின் தங்கை வசுதாரணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி என்பதும், விஜயராகவன் அவரது மனைவி சென்னை ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்ததும், கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தின் காரணமாக சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
வேப்பூரில் நடைபெற்று வரும் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இது போன்ற விபத்துகள் தினந்தோறும் நடைபெறுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை விபத்தில் லாரி கார் ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.