BREAKING NEWS

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய உட்பட்ட மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.

 

மேலபெரும்பள்ளம் ஊராட்சி கீழத்தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்த நிலையில் 100 கிலோ வாட் திறன் கொண்ட ரூ. 8.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி அமைத்து அதை பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் திறந்து வைத்து பேசினார்.

 

நிகழ்ச்சிக்கு சீர்காழி மின் வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர், உதவி மின் பொறியாளர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

 

இதில் தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பி.எம். அன்பழகன், எம். அப்துல் மாலிக் செம்பை ஒன்றிய துணைப் பெரும் தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS