BREAKING NEWS

அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கு செல்வார். வேலூர் இப்ராஹிம்

அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கு செல்வார். வேலூர் இப்ராஹிம்

சிறுபான்மையின மக்களுக்கு பொது சிவில் சட்டம் எதிராக உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் இப்படியே பொய் சொல்லி இஸ்லாமியர்களை பயமுறுத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டம் கூத்துக்கச்சேரி நாடகம் இந்த நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் வேலூரில் வேலூர் இப்ராஹிம் பேட்டி.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் வசதி சாலை வசதி பாதாள சாக்கடை திட்டம் தூய்மை பணி நிறைவேற்றாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பொதுமக்களின் பிரச்சனைகள் வேலூர் மாநகராட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று பாஜக சிறுபான்மையினர் தேசிய பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ரத்தினவேலிடம் புகார் மனு அளித்தார் இதில் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெகன், S.L.பாபு உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம் தமிழகத்தை பொறுத்தவரையில் ஊழல் அமைச்சர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது செந்தில் பாலாஜியில் ஆரம்பித்து இன்றைக்கு பொன்முடி அவர்களுடைய கொள்ளை அடித்த பணம் செம்மண் திருட்டு இவை அனைத்திற்கும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இன்றைக்கு மீண்டும் அமலாக்கத்துறை மறு விசாரணைக்கு அழைத்து சம்மன் கொடுத்துள்ளார்கள் எங்களுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் விசாரணைக்கு செல்லும் அமைச்சர் பொன்முடி அப்படியே நேரடியாக திகார் சிறைக்கு செல்வார்.

 

பொன்முடி திகார் சிறைக்கு செல்லும் காரணம் என்னவென்றால் மிகப்பெரிய இழப்பீடை அரசுக்கு அவர் ஏற்படுத்தி உள்ளார் மூன்று நான்கு மாத காலத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் சிறைக்குச் செல்வார்கள் இந்த அரசு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது.

 

பொது சிவில் சட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கிறார் அவர் சொல்லும் காரணம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உள்ளது. அதனால் எதிர்க்கிறோம் என சட்டம் ஆணையத்திற்கு அவர் அனுப்புகிறார் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பொது சிவில் சட்டம் எதிராக உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் இப்படியே பொய் சொல்லி இஸ்லாமியர்களை பயமுறுத்தி வருகிறார்.

பொது சிவில் சட்டம் இன்னும் உன் வடிவில் வரவில்லை அதில் என்னென்ன சரத்துக்கள் உள்ளது என்பதும் தெரியாது
இவையெல்லாம் தெரியாமல் தமிழக முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களின் வாக்கு வங்கிக்காக பொய் பேசி வருகிறார்.

இந்து மக்கள் இஸ்லாமிய மக்கள் ஒன்றுபட்டு திருமாவளவன் போன்ற மத அரசியல் செய்பவர்களை வேர் அறுக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் போன்ற பாசிஸ்டை புறக்கணிக்க வேண்டும்.

 

கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் கூட்டம் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது கொள்ளை அடிக்கும் காட்சிகளும் வாரிசு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தனர் இவர்கள் ஒன்றிணைவது மக்களை ஏமாற்றும் செயல்.
மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் குரல் கொடுக்காமல் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து உள்ளார்.

 

எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒரு கூத்துக் கச்சேரி நாடகமாக நாங்கள் பார்க்கிறோம் இந்த நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் என பேசினார்.

CATEGORIES
TAGS