BREAKING NEWS

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் இன மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலம்பட்டி பேரூராட்சியில் மின் சார் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் வீடு கட்ட பாரத பிரதமர் அவர்களால் வீடு கட்டும் திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நிதி உதவி வழங்க ஆவணம் செய்தல் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வேலம்பட்டி பேரூராட்சியின் நிர்வாகத்தையும் கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் கே.கேசவன், தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே. கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சசிகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.எஸ்.ஜி. சிவப்பிரகாஷ், பொருளாளர் எஸ்.வி. கவியரசு,, ஜே எம். ரமேஷ், உள்பட ஏராளமான ஜனதா கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இறுதியாக பொதுச் செயலாளர் பசுபதி நன்றி கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS