BREAKING NEWS

மாணவி ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைகாக சேலம் மருத்துவமனையில் அனுமதி .

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் இவரது மகள் ஸ்ரீமதி (14) இவர் தாண்டவராயபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் பள்ளியில் அரசு வழங்கும் உதவித்தொகைக்காக தாண்டவராயபுரம் தபால் நிலையத்தில் புதிய கணக்கு தொடங்குவதற்காக மாணவி ஸ்ரீமதி தனது வீட்டிலிருந்து அவரது தந்தை சிவக்குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது சாலையை கடக்க முயன்றபோது ராசிபுரத்தில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்ற கார் இரு சக்கர வாகனம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளனது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி ஸ்ரீமதி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.அருகிலிருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்ளுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள மாணவி ஸ்ரீமதி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS