BREAKING NEWS

ராம் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்:

தேனி – அல்லிநகரம் நகராட்சியில் தனியார் தூய்மைப் பணியாளர் ஒப்பந்த நிறுவனமான ராம் அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 140 நபர்களுக்கு இலவச கையுறைகள், சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கிர் பாட்ஷா முன்னிலையில் வழங்கப்பட்டது.

இலவச கையுறைகள், சீருடைகள் , மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக் கொண்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ராம் அண்ட் கோ நிறுவனத்திற்கும், மாவட்ட மேலாளருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS