BREAKING NEWS

பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிபகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் குடிநீர் வடிகால் துறை 15 வது மத்திய நிதி குழு மானிய நிதி திட்டம் கீழ் 5 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கான கூடுதல் கட்டிடம் கட்டும் பணி தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பொதுமக்கள் சிகிச்சைக்காக பயன் பற்று வருகின்ற இந்த நிலையில் தற்போது கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Share this…

CATEGORIES
TAGS