பூம்புகார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் புவி வெப்பமயமாவதை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் கல்லூரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் வளர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நீர்வள நிலவள நவீனமயமாக்கள் திட்டத்தின் கீழ் புவி வெப்பமயமாவதை பற்றிய கல்லூரியின் நாட்டு நலப்பணத் திட்ட மாணவர்கள்மற்றும் விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட நீர்வளத்துறை பொறியாளர் ஜெயராமன் பங்கேற்று கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் விவசாயிகளுக்கு நீரின் அவசியத்தை பற்றியும் நீர் வளத்தை பற்றியும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள் பேராசிரியர்கள் பூவி வெப்பமராயமாவதை தடுக்கும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS சீர்காழி தாலுக்கா பூம்புகார் கல்லூரிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திறன் வளர் மேம்பாட்டு பயிற்சிமயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்